Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரனாப் முகர்ஜி… ஆழ்ந்த கோமா நிலையில் நீடிப்பு!

பிரனாப் முகர்ஜி… ஆழ்ந்த கோமா நிலையில் நீடிப்பு!
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (17:32 IST)
முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி இன்னும் ஆழ்ந்த கோமா நிலையிலேயே நீடிப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான பிரனாப் முகர்ஜி, மூளையில் உள்ள ரத்தக்கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. அதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து வெண்ட்டிலேட்டர் உதவியுடனேயே இருந்தார்.

தற்போது வரை அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவரது சிறுநீரக செயல்பாடுகள் மேலும் குறைந்துள்ளதாகவும் தொடர் கோமா நிலையிலேயே அவர் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்றைய அப்டேட்டாக பிரனாப் முகர்ஜி இன்றும் ஆழ்ந்த கோமா நிலையிலேயே இருப்பதாக இராணுவ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரனாப் முகர்ஜி 17 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வசந்தகுமார் உடல்நிலை எப்படி உள்ளது – மகன் விஜய் வசந்த் வெளியிட்ட அப்டேட்!