Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.எஸ்.ஐ. கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத்!

ஐ.எஸ்.ஐ. கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத்!
, திங்கள், 21 மார்ச் 2022 (07:59 IST)
ஐ.எஸ்.ஐ. கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத்!
ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
எட்டாவது இந்தியன் சூப்பர் லீக் என்று கூறப்படும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி நேற்று கோவாவில் நடந்தது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் மற்றும் கேரள அணிகள் மோதின
 
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டம் பெறலாம் என்பதால் இரு அணிகளும் மிகவும் தீவிரமாக விளையாடின. இந்த நிலையில் போட்டி முடிவின் போது இரு அணிகளும் தலா ஒரு கோல் மட்டுமே போட்டதால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி சூட் முறை கடைபிடிக்கப்பட்டது
 
இதில் ஐதராபாத் 3 கோல்களையும் கேரளா ஒரு கொலையும் போட்டதால் ஹைதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் முதல் முறையாக ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!