Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணிக்கு திரும்பி வந்த ABD! ஆர் சி பி அணிக்கு கூடுதல் பலம்!

அணிக்கு திரும்பி வந்த ABD! ஆர் சி பி அணிக்கு கூடுதல் பலம்!
, சனி, 19 மார்ச் 2022 (15:14 IST)
ஆர் சிபி அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஏ பி டிவில்லியர்ஸ் அந்த அணியின் ஆலோசகராக இப்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார். அதுபோல அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில் மீண்டும் அவர் ஆர் சி பி அணியில் இடம் பெற உள்ளார். ஆனால் வீரராக இல்லை. ஒரு ஆலோசகராக அவரை ஆர் சி பி அணி நியமிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மார்ச் 12 ஆம் தேதி அந்த அணியின் புதிய தலைவர் அறிவிக்கப்பட உள்ளார். அப்போது இந்த முடிவையும் அறிவிக்க உள்ளதாக என தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் மீண்டும் அவர் ஆர் சி பி அணியில் இடம் பெற உள்ளார். ஆனால் வீரராக இல்லை. அணியின் ஆலோசகராக. ஆம் இன்று ஆர் சி பி அணி அதிகாரப்பூர்வமாக ஏ பி டிவில்லியர்ஸை அணியின் ஆலோசகராக நியமித்ததை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக ஆர் சி பி அணிக்காக விளையாடி டிவில்லியர்ஸ் அந்த அணிக்கே ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் பலம் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மார்க்வுட்! – புதிய அணிக்கு வந்த சோதனை!