Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

FIFA உலகக் கோப்பை : பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய குரோஷியா

brazil- Croatia
, சனி, 10 டிசம்பர் 2022 (17:13 IST)
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே.
 

ஏற்கனவே நெதர்லாந்து அர்ஜென்டினா இங்கிலாந்து பிரான்சு ஆகிய 4 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று பிரேசில் மற்றும் குரோஷியா நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

நேற்று நள்ளிரவு நடந்த இப்போட்டியில்,  பிரேசிலுக்கு ஈடுகொடுத்து குரோஷியா அணி விளையாடியது.

ஆனால், பிரேசிலை விடவும் சிறப்பாக விளையாடிய குரரோஷிய அணிவீரர்ககள்  தடுப்பாட்டத்தை சிறப்பாக கையாண்டனர்.

இரு அணியினரும் 90 நிமிடத்தில் கோல் அடிக்கவில்லை. எனவே கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இதில், நெய்மர் ஒரு கோல் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை சமன் செய்தார்.

ஆட்டம் முடித 4 நிமிடங்களே இருந்த நிலையில், குரோஷியாவும் பதிலுக்கு கோல் அடித்தது. எனவே பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்றது.

இதில், பிரேசில் 4 வாய்ப்புகளில் 3 கோல்கள் அடிக்க, குரோஷியா 4 வாய்ப்புகளையும் கோலாக மாற்றியது. எனவே 4-2 என்ற கணக்கில் குரோஷியா பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

FIFA உலகக் கோப்பை : அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா