Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு: முதல் பந்திலேயே பவுண்ட்ரி அடித்த ரோஹித்!

ind vs eng
, வியாழன், 10 நவம்பர் 2022 (13:34 IST)
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு: முதல் பந்திலேயே பவுண்ட்ரி அடித்த ரோஹித்!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியின் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கிய நிலையில் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா பவுண்டரி அடித்து அசத்தினார்.
 
 இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதும் என்பதால் இந்த இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் விளையாடும் வீரர்களின் முழு விவரங்கள் இதோ:
 
இந்தியா; கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், அஸ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப்சிங்
 
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அதில் ரஷித்,
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சானியா மிர்சா - சோயப் மாலிக் அதிகாரப்பூர்வ விவாகரத்து??