Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன் அடித்து குவிக்கும் இங்கிலாந்து: வேடிக்கை பார்க்கும் இந்தியா

Webdunia
ஞாயிறு, 30 ஜூன் 2019 (17:44 IST)
இன்று நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதி வருகின்றன. 35 ஓவர்களை தொட்டிருக்கும் இங்கிலாந்து 3 விக்கெட் மட்டும் இழந்து 211 ரன்கள் பெற்றிருக்கிறது. இந்தியாவால் இங்கிலாந்தின் பேட்டிங்கை சமாளிக்க முடியவில்லையா என கேள்வி எழுந்துள்ளது.

அதிரடி பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, பும்ரா ஆகியோரின் பந்துகளை ஜேசன் ராயும், பேர்ஸ்ட்ரோவும் அடித்து விளாசினார்கள். ஜேசன் ராய் ஒரு அரைசதமும், பேர்ஸ்ட்ரோ ஒரு சதமும் அடித்து இங்கிலாந்தின் ரன் ரேட்டை அதிகப்படுத்தியுள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் விக்கெட் இழந்த நிலையில், ஜோ ரூட் இறங்கி விளையாடி வருகிறார். அவருக்கு பின் இறங்கிய மோர்கன் ஷமி போட்ட பந்தில் 2 ரன்களில் அவுட் ஆனார்.

ரசிகர்கள் கணிப்பின்படி 50 ஓவர்கள் வரை இங்கிலாந்து விக்கெட் இழக்காமல் விளையாடி முடிவில் 280 முதல் 300 ரன்களுக்குள் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments