Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்திரேலியாவின் கனவு கலைந்தது. அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!

sri vs eng
, சனி, 5 நவம்பர் 2022 (16:54 IST)
இன்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லும் என்ற நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலியாவின் கனவு கலைந்தது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 142 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே நியூசிலாந்து அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணியும் தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா நியூசிலாந்து இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் தலா 7 புள்ளிகள் எடுத்து இருந்தபோதிலும் ரன் ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலியை பிறந்தநாளில் பாராட்டிய கம்பீர்… ஆச்சர்யமா இருக்கே?