Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனியின் பிட்னெஸ் ஆச்சு? அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்க்ள்!

தோனியின் பிட்னெஸ் ஆச்சு? அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்க்ள்!
, சனி, 3 அக்டோபர் 2020 (10:18 IST)
நேற்றையப் போட்டியில் தோனி கடைசி சில ஓவர்களில் மிகவும் சோர்வாகவும் அயர்ச்சியாகவும் காணப்பட்டார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இந்தியாவின் தட்பவெப்ப நிலையை விட துபாயில் வெப்பம் அதிகம் என்பதால் போட்டியின் இடையே பல வீரர்கள் அதிக நீர் வெளியேற்றம் காரணமாக மிகவும் சோர்வாகக் காணப்பட்டு வருகின்றனர். அதே போல நேற்று தோனியும் விக்கெட்டுகளுக்கு இடையே ரன்கள் எடுக்க ஓடமுடியாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

அதனால் அணியின் மருத்துவர் வந்து தோனிக்கு சில சிகிச்சைகளை செய்து மாத்திரைகளையும் கொடுத்தார். ஆனால் அதன் பின்னரும் தோனியால் முழு ஆற்றலோடு விளையாட முடியவில்லை. வழக்கமாக எந்த நாடாக இருந்தாலும், முழுமையான ஆற்றலோடு விளையாடும் தோனியே களைப்பானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க அதை செஞ்சிருந்தா நேத்து ஜெயிச்சிருப்போம்! – மனம் நொந்த தோனி!