Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூவரை தக்க வைக்கின்றது சென்னை அணி: யார் யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (06:40 IST)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைந்துள்ளதால் அனைத்து அணிகளுக்கும் மீண்டும் ஏலம் விடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ருத்ராஜ் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரையும் தக்கவைத்துக்கொள்ள சென்னை அணி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
மேலும் அடுத்த மூன்று ஐபிஎல் சீசனுக்கு மகேந்திர சிங் தோனியை தக்கவைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே அடுத்த மூன்று தொடர்களில் தோனி விளையாடுவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments