Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூவரை தக்க வைக்கின்றது சென்னை அணி: யார் யார் தெரியுமா?

Advertiesment
மூவரை தக்க வைக்கின்றது சென்னை அணி: யார் யார் தெரியுமா?
, வியாழன், 25 நவம்பர் 2021 (06:40 IST)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைந்துள்ளதால் அனைத்து அணிகளுக்கும் மீண்டும் ஏலம் விடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ருத்ராஜ் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரையும் தக்கவைத்துக்கொள்ள சென்னை அணி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
மேலும் அடுத்த மூன்று ஐபிஎல் சீசனுக்கு மகேந்திர சிங் தோனியை தக்கவைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே அடுத்த மூன்று தொடர்களில் தோனி விளையாடுவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி,ஜடேஜா, ருத்துவாஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்கள் ரீ -டெயின் !