Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனியின் முடிவு பல முறைத் தவறாகியுள்ளது – ரகசியம் உடைத்த குல்தீப் !

தோனியின் முடிவு பல முறைத் தவறாகியுள்ளது – ரகசியம் உடைத்த குல்தீப் !
, செவ்வாய், 14 மே 2019 (13:27 IST)
இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தோனியின் முடிவு பலமுறைத் தவறாக ஆகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக பரிணமித்து வருகிறார் குல்தீப் யாதவ். லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் குல்தீப்பின் வர்கையால் அஸ்வின் மற்றும் ஜடேஜா இடம் கேள்விக்குள்ளாகியுள்ளது. அஸ்வின் ஜடேஜா போன்றவர்களை தோனியின் கண்டுபிடிப்பு என சொன்னால் குல்தீப்பை கோஹ்லியின் கண்டு பிடிப்பு என சொல்லலாம்.

இந்நிலையில் குல்தீப் யாதவ் களத்தில் தோனி கொடுக்கும் ஆலோசனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தோனியின் அறிவுரைகள் குறித்து பேசியுள்ள குல்தீப் ‘ தோனி அதிகமாக வந்து நம்மிடம் பேசிக்கொண்டிருக்க மாட்டார். அவர் எதாவது டிப்ஸ் வழங்கவேண்டும் என நினைத்தால் அதை நம்மிடம் சொல்வார். ஆனால் பலமுறை தோனியின் முடிவுகள் தவறாகியுள்ளது. ஆனால் அதை நாம் அவரிடம் சொல்ல முடியாது’ எனக் கூறியுள்ளார்.

வர்ணனையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை தோனியைக் கடவுளாக நினைத்து வழிபட்டு வரும் வேளையில் அணிக்குள்ளாகவே தோனி பற்றிய விமர்சனக் குரல் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போட்டிக்குப் பிறகு 6 தையல் … காலில் ரத்தக்கையோடு விளையாண்ட வாட்ஸன் – ரசிகர்கள் நெகிழ்ச்சி !