Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகாரில் கைதான தனுஷ்கா குணதிலகா அணியில் இருந்து நீக்கமா?

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (16:43 IST)
பாலியல் புகாரில் கைதான தனுஷ்கா குணதிலகா அணியில் இருந்து நீக்கமா?
பாலியல் புகார் காரணமாக ஆஸ்திரேலியா போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா இலங்கை அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
சமீபத்தில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்ற நிலையில் அந்த அணியில் உள்ள ஆல்ரவுண்டர் வீரரான தனுஷ்கா குணதிலகா ஒரு பெண்ணிடம் அத்துமீறியதாக தெரிகிறது
 
இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது
 
அவர் தான் குற்றவாளி இல்லை என நிரூபித்து நிரபராதியாக வெளிவந்தவுடன் தான் அவரை அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்