Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆகஸ்ட் 21ம் தேதி துபாய் கிளம்புகிறது சிஎஸ்கே அணி: தலைமை செயல் அதிகாரி

ஆகஸ்ட் 21ம் தேதி துபாய் கிளம்புகிறது சிஎஸ்கே அணி: தலைமை செயல் அதிகாரி
, செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:35 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு மூன்று மைதானங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தயாராக இருப்பதாகவும் விரைவில் ஐபிஎல் அணிகள் பயிற்சிக்காக துபாய் செல்லும் என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 21-ஆம் தேதி துபாய் புறப்பட்டு செல்ல இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
சேப்பாக்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி பயிற்சி தொடங்கும் என்று கூறிய அவர் தோனி, ரெய்னா உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆகஸ்ட் 15 16ம் தேதிகளில் சென்னை வந்த அடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2011 உலகக்கோப்பை வென்றதற்கு கங்குலிதான் காரணம் – இளம் வீரரின் வித்தியாசமான கருத்து!