Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வீரர் உடல்நிலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் டூபிளஸ்சிஸ்

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (10:25 IST)
சென்னை வீரர் உடல்நிலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் டூபிளஸ்சிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான டூபிளஸ்சிஸ்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது அபுதாபியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடின. இந்த போட்டியின் 7வது ஓவரில் கிளாடியேட்டர் அணியின் டேவிட் மில்லர் ஒரு பந்தை வேகமாக அடித்ததால் அந்த பந்து பவுண்டரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான டுப்லஸ்ஸிஸ் அதை தடுக்க ஓடினார். அப்போது சக வீரரான முகமது ஹஸ்னைன் காலில் அவரது தலை மோதியது
 
இதில் டூபிளஸ்சிஸ்படுகாயமடைந்து சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இனிவரும் போட்டியில் டூபிளஸ்சிஸ்க்கு பதிலாக வேறு வீரர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனியர் வீரருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் ஒரே மரியாதைதான்.. பஞ்சாப் அணி குறித்து ஷஷாங் சிங் பெருமிதம்!

ஒவ்வொரு போட்டியும் நாங்களா செதுக்குனது..! பஞ்சாப் கிங்ஸ் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எந்த டிவியில், எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சச்சின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.. குவியும் வாழ்த்துக்கள்

டெஸ்ட் போட்டிகளில் கோலியின் ‘இன்மை’யை உணர்வேன் – கேப்டன் ஷுப்மன் கில் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments