சென்னை வீரர் உடல்நிலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் டூபிளஸ்சிஸ்

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (10:25 IST)
சென்னை வீரர் உடல்நிலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் டூபிளஸ்சிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான டூபிளஸ்சிஸ்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது அபுதாபியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடின. இந்த போட்டியின் 7வது ஓவரில் கிளாடியேட்டர் அணியின் டேவிட் மில்லர் ஒரு பந்தை வேகமாக அடித்ததால் அந்த பந்து பவுண்டரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான டுப்லஸ்ஸிஸ் அதை தடுக்க ஓடினார். அப்போது சக வீரரான முகமது ஹஸ்னைன் காலில் அவரது தலை மோதியது
 
இதில் டூபிளஸ்சிஸ்படுகாயமடைந்து சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இனிவரும் போட்டியில் டூபிளஸ்சிஸ்க்கு பதிலாக வேறு வீரர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

நம்ம புள்ளைங்கதான் டாப்ல… ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments