Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிஎஸ்கே வீரர்கள் அரசாங்க அதிகாரிகள் போல விளையாடுகிறார்கள் –சேவாக் கொட்டு!

சிஎஸ்கே வீரர்கள் அரசாங்க அதிகாரிகள் போல விளையாடுகிறார்கள் –சேவாக் கொட்டு!
, வெள்ளி, 9 அக்டோபர் 2020 (11:47 IST)
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந்த நிலையில் சிஎஸ்கே வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் மிகவும் பரிதாபகரமான தோல்வியை அடைந்தது. இத்தனைக்கும் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்து சென்றனர். ஆனால் 12 ஆவது ஓவரில் இருந்து 15 ஓவர் வரை சுனில் நரேனின் பந்துவீச்சு போட்டியையே மாற்றியது.

தோல்விக்கு மிக முக்கியமானக் காரணமாக சொல்லப்படுவது கேதார் ஜாதவ்வின் டெஸ்ட் இன்னிங்ஸ்தான். இக்கட்டான நேரத்தில் இறங்கி ரன்களை சேர்க்க வேண்டிய நேரத்தில் அவர் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் கடுப்பான சிஎஸ்கே ரசிகர்கள் அவரைக் கண்டபடி திட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இன்னும் ஒரு சிலரோ கேதார் ஜாதவ் மிகவும் மோசமாக விளையாடியதால் மோசமாக விளையாடிய தோனி (12 பந்துகளில் 11 ரன்கள்) ரசிகர்களின் விமர்சனங்களில் இருந்து தப்பிவிட்டார் என கருத்து தெரிவிக்கின்றனர். இதையடுத்து சமூகவலைதளங்கள் முழுவதும் கேதார் ஜாதவ் டிரோல்களும் மீம்ஸ்களுமாக பரவி வருகின்றன. மேலும் கேதார் ஜாதவ்வை அணியில் இருந்து நீக்கவேண்டும் என ஆன்லைனில் பெட்டிஷன் எல்லாம் உருவாக்கியுள்ளார்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் ‘இந்த இலக்கு மிகவும் எளிதான எட்டக்கூடியதுதான். அந்த அணியில் சில வீரர்கள் அரசாங்க அதிகாரிகள் போல கடமைக்கு விளையாடுகிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரைசதத்தில் ஒரு அரைசதம்: டேவிட் வார்னர் சாதனை