Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் தொடரில் தோனிக்கு இது கடைசி ஆண்டா? சிஎஸ்கே நிர்வாக இயக்குனர் தகவல்..!

ஐபிஎல் தொடரில் தோனிக்கு இது கடைசி ஆண்டா? சிஎஸ்கே நிர்வாக இயக்குனர் தகவல்..!
, சனி, 23 டிசம்பர் 2023 (18:57 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கும் போது தோனிக்கு இது கடைசி ஆண்டா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது என்பதும் ஆனால் அடுத்த ஆண்டு அவர் விளையாடி வருகிறார் என்பதையும் கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.
  
கடந்த முறை ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் என்ற சிஎஸ்கே அத்துடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் அவர் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் எம்.எஸ். தோனியின் கடைசி ஆண்டாக வருகின்ற ஆண்டு இருக்க முடியுமா என்பதை நாங்கள் கூற முடியாது, அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என சிஎஸ்கே அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னும் பத்து நாட்களில் அவர் தனது வலை பயிற்சியை தொடங்க இருப்பதாகவும் இந்த ஆண்டும் அவர் கோப்பையை பெற்று தருவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ஹர்திக் பாண்ட்யா