Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்த தோனி: பஞ்சாப் அணிக்கு கொடுத்த இலக்கு இதுதான்..!

கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்த தோனி: பஞ்சாப் அணிக்கு கொடுத்த இலக்கு இதுதான்..!
, ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (17:20 IST)
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் தல தோனி சிக்சர் அடித்ததை அடுத்து பஞ்சாப் அணிக்கு சென்னை அணி 201 என்ற இலக்கை கொடுத்துள்ளது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி அதிரடியாக களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கான்வே மிக அபாரமாக விளையாடி 92 ரன்கள் அடித்தார். 
 
கடைசி ஓவரையில் இரண்டாவது பந்தில் களம் இறங்கிய தல தோனி கடைசி இரண்டு பந்துகளில் சிக்சர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சிஎஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது.
 
இந்த நிலையில் 201 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு.. இன்றைய வெற்றி யாருக்கு?