Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு.. இன்றைய வெற்றி யாருக்கு?

டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு.. இன்றைய வெற்றி யாருக்கு?
, ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (15:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 41வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயிலான போட்டி நடைபெற உள்ளது. 
 
இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தல தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் சில இடங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும் பஞ்சாப் அணி 8 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் சென்னை அணி நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை பெற வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்கெட் கீப்பருக்கு பஞ்சம்.. இந்திய அணிக்கு திரும்புகிறாரா ‘தல’ தோனி?! – ரவி சாஸ்திரி தகவல்!