Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொழிற்சாலையில் வாயு கசிவு: 9 பேர் உயிரிழப்பு, 11 பேர் கவலைக்கிடம்..!

தொழிற்சாலையில் வாயு கசிவு: 9 பேர் உயிரிழப்பு, 11 பேர் கவலைக்கிடம்..!
, ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (11:03 IST)
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிவு, ஏற்பட்டதால்  9 பேர் பலியானதாகவும் 11 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா என்ற பகுதியில் தொழிற்சாலை ஒன்று கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வாயுகசிவு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அந்த தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 9 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் ஒரு சிலர் இந்த வாயு கசிவு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் பதினோரு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 
 
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சென்றுள்ளதாகவும் வாய்வு கசிவு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5000 ஆக குறைந்தது கொரோனா பாதிப்பு.. பொதுமக்கள் நிம்மதி..!