Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் காலி.. சேப்பாக்கத்தில் களை கட்டும் பிளே ஆப் போட்டிகள்..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (13:33 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 23ஆம் தேதி குவாலிஃபையர் 1 போட்டியும் மே 24 ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கப்பட்ட நிலையில் ஒரு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டு பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஒரு சில நேரங்களில் ஒரு சில மணி நேரங்களில் விற்று தீர்ந்ததால்  ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்

ரூ.2000, ரூ.2500, ரூ.3000, ரூ.5000 என நான்கு விலையில் டிக்கெட் விற்பனையான நிலையில் அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இரண்டு பிளே ஆப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments