Webdunia - Bharat's app for daily news and videos

Install App

101க்கு ஆல்-அவுட்.. முக்கியப் போட்டியில் கோட்டை விட்டதா பஞ்சாப்? பெங்களூரு பவுலிங் அபாரம்..!

Siva
வியாழன், 29 மே 2025 (20:58 IST)
ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே, குவாலிஃபயர்  போட்டி நடைபெற்று வரும் நிலையில், இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் வந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இந்த நிலையில், பஞ்சாப் அணி மோசமாக பேட்டிங் செய்து, குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர்களில் இருந்து இறுதி ஆட்டக்காரர்கள் வரை ஒருவர் கூட பொறுப்புடன் விளையாட வில்லை என்பதும், ஸ்டோனிஸ் மட்டுமே ஓரளவு தாக்குபிடித்து 26 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பெங்களூர் தரப்பில், ஹாசில்வுட் மற்றும் சுயாஷ் ஷர்மா தலா 3 விக்கெட்டுக்களையும், யாஷ் தயால் 2 விக்கெட்டுக்களையும், புவனேஷ் குமார் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில், 102 என்ற எளிய இலக்கை நோக்கி பெங்களூர் அணி விளையாட உள்ள நிலையில், அந்த அணியின் நீண்ட பேட்டிங் வரிசையை வைத்துக் கொண்டு, மிக எளிதில் வெற்றி பெற்று விடும் என்று கணிக்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஐபிஎல் இறுதிபோட்டி.. 62% மழைக்கு வாய்ப்பு.. போட்டி ரத்தானால் சாம்பியன் யார்?

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments