Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

RCB vs PBKS இன்று மோதல்.. இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்று இறுதிப் போட்டிக்கு..!

Advertiesment
ஐபிஎல்

vinoth

, வியாழன், 29 மே 2025 (08:06 IST)
கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. லீக் போட்டிகள் முடிந்து பஞ்சாப் கிங்ஸ் லெவன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள முடிந்து பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்று முதல் குவாலிஃபையர் போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளும் லீக் போட்டிகளில் நடந்த போட்டிகளில் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. சண்டிகரில் இந்த போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

இரு அணிகளும் இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு முதல் இடங்களைப் பிடித்துள்ளன. இரு அணிகளுமே இதுவரைக் கோப்பையை வென்றதில்லை என்பதால் இன்று நடக்கும் போட்டியின் மூலம் கோப்பையை வெல்லாத ஒரு அணி இறுதிப் போட்டிக்கு செல்வது உறுதியாகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டார்கெட் 427 ரன்கள்.. ஆனால் 2 ரன்களில் ஆல்-அவுட்.. ஒரு ஆச்சரியமான கிரிக்கெட் போட்டி..!