Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்று நிதானமாக பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா!

டாஸ் வென்று நிதானமாக பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா!
, வெள்ளி, 27 நவம்பர் 2020 (10:17 IST)
டாஸ் வென்று நிதானமாக பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் சற்றுமுன்னர் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். இதனை அடுத்து டேவிட் வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி நிதானமாக விளையாடி வருகின்றனர்.

சற்றுமுன் வரை ஆஸ்திரேலியா அணி 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளனர் என்பதும், டேவிட் வார்னர் 29 பந்துகளில் 23 ரன்கள் ஃபின்ச் 42  பந்துகளில் 29 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணியில் இன்று நடராஜன் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் ஆடும் 11 அணியில் இல்லை என்பது தமிழக ரசிகர்களுக்கு அதிருப்தியாக உள்ளது. இந்திய அணிகள் இன்று விளையாடும் வீரர்களின் விவரம் பின்வருமாறு:
 
தவான், மயாங்க் அகர்வால், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷமி, சாஹல், சயினி, பும்ரா

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் கிரிக்கெட்: நடராஜன் அணியில் உண்டா?