ஆஸ்திரேலியா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

Siva
செவ்வாய், 4 மார்ச் 2025 (17:59 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரை முழுவதுமாக விளையாடாமல் ஆல் அவுட் ஆகிவிட்டது. இதனை அடுத்து, ஸ்கோர் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
 
இன்றைய போட்டியில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே அபாரமாக விளையாடி 73 ரன்கள் அடித்தார். அதன் பின்னர், அலெக்ஸ் கேர்ரி 61 ரன்கள் அடித்து அசத்தினார்.
 
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
265 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்தியா வென்றால், இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும். மேலும், இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments