Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாரையும் வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் உள்ளது.. கங்குலி நம்பிக்கை!

Advertiesment
யாரையும் வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் உள்ளது.. கங்குலி நம்பிக்கை!

vinoth

, செவ்வாய், 4 மார்ச் 2025 (12:30 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.  இதையடுத்து முதல் அரையிறுதிப் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு நடக்கின்றது.

கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வென்றதே இல்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றது. அதன் பிறகு நடந்த எல்லா ஐசிசி நாக் அவுட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது.

இந்த முறை ஆஸி அணி முன்னணி வீரர்கள் இல்லாமல் வலுக்குறைந்து காணப்பட்டாலும் நாக் அவுட் போட்டி என்பதால் அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணிப் பற்றி பேசும்போது “இந்திய அணி சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை சென்றுள்ளது. அதனால் எதிரணி யாராக இருந்தாலும் வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியாவை வெல்ல இதைதான் செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் சொல்லும் அறிவுரை!