Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திலக் வர்மா அபார பேட்டிங்.. பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.. கடைசி ஓவரில் நடந்த மேஜிக்..!

Advertiesment
ஆசிய கோப்பை

Siva

, திங்கள், 29 செப்டம்பர் 2025 (07:09 IST)
நேற்று நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், இந்திய அணி த்ரில் வெற்றியைப் பெற்று, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
 
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 147 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சவால்கள் காத்திருந்தன. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஏமாற்றம் அளித்து அவுட் ஆனார்.
 
ஆனால், பின்னர் களமிறங்கிய திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இருவரும் நிலையான பார்ட்னர்ஷிப்பை அமைத்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
 
கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டம் உச்சகட்ட பரபரப்பை எட்டியது. திலக் வர்மா முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்து, அடுத்த பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். நான்காவது பந்தில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி அடித்து, இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்.
 
இந்த அபாரமான வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. திலக் வர்மாவின் பொறுப்பான ஆட்டம், சஞ்சு சாம்சனின் உறுதுணை, குல்தீப் யாதவ்வின் அபாரமான பந்துவீச்சு ஆகியவை இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க சிஎஸ்கே ஜெர்ஸி அணிந்து வாருங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன்