Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவுலரானது ஏன்? டார்லிங் பட்டம் வென்ற சச்சின் மகன் விளக்கம்

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (15:16 IST)
வேகப்பந்து வீச்சாளராக முடிவு செய்தது ஏன்? என்று சச்சின் மகன் அர்ஜூன் விளக்கமளித்துள்ளார்.

 
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் பேட்டிங்கில் பல சாதனைகள் படைத்துள்ளார். உலகளவில் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் அர்ஜூன் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கியுள்ளார்.
 
ஆஸ்திரேலியா சிட்னியில் கிளப் டி20 போட்டிகள் நடைபெற்றது. இதில் சச்சினின் மகன் அர்ஜூன் பங்கேற்றார். விளையாடிய போட்டிகளில் ஆல் ரவுண்டராக அசத்தினார். இதற்காக அவருக்கு தொடரின் டார்லிங் பட்டம் வழங்கப்பட்டது. தான் வேகப்பந்து வீச்சாளராக முடிவு செய்தது ஏன் என்று அர்ஜூன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
எனக்கு சிறுவயது முதலே வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்பதே கனவு. இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரார்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவின் ஜாகிர் கான், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோர்தான் எனது ரோல் மாடல்கள்.
 
வாசிம் அக்ரம் எனக்கு எப்படி பந்தை பிடிப்பது, எப்படி ஸ்விங் செய்வது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments