Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலிய அணியை பொளந்து கட்டிய வைபவ் சூர்யவன்ஷி.. 8 சிக்ஸர்களுடன் மின்னல் வேக சதம்!

Advertiesment
வைபவ் சூர்யவன்ஷி

Siva

, புதன், 1 அக்டோபர் 2025 (12:30 IST)
இந்திய கிரிக்கெட்டின் இளைய நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி,  ஆஸ்திரேலிய அண்டர்-19 அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவர் வெறும் 78 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
 
பிரிஸ்பேனில் நடந்த இந்த போட்டியில், வைபவ் 86 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் குவித்தார். 18 வயதுக்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் வரலாற்றில், நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லத்துக்குப் பிறகு, 100 பந்துகளுக்குள் இரண்டு சதங்களை பதிவு செய்த ஒரே வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றுள்ளார்.
 
இதற்கு முன், அவர் கடந்த ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 பந்துகளில் சதம் அடித்தார். இந்த இடது கை ஆட்டக்காரரான இவர் ஒருநாள் கிரிக்கெட்  வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் முறியடித்துள்ளார்.
 
முன்னாள் இந்திய அண்டர்-19 கேப்டன் உன்முக்த் சந்த் 21 போட்டிகளில் அடித்த 38 சிக்ஸர்கள் என்ற நீண்ட கால சாதனையை, வைபவ் சூர்யவன்ஷி 10 போட்டிகளில் 41 சிக்ஸர்கள் அடித்து முறியடித்துள்ளார்.
 
இந்தப் போட்டியில், இந்தியாவின் வேதந்த் திரிவேதியும் 192 பந்துகளில் 140 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திலக் வர்மாவை அழைத்துப் பாராட்டிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!