கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக இருந்தது.
இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து தான் இன்னமும் ரன் மெஷின்தான்” என்பதை நிரூபித்தார். நேற்றைய அரையிறுதிப் போட்டியிலும் இக்கட்டான நிலையில் மிகச்சிறப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக இருந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 5 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். மற்ற அனைத்தும் ஒன்றும் இரண்டுமாக ஓடி சேர்த்ததுதான்.
கோலி மிகவும் ஃபார்முக்கு வந்துள்ளதால் ஆர் சி பி ரசிகர்கள்தான் அதிக குஷியாகியுள்ளார்கள். ஏனென்றால் இம்மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் கோலியோடு இணைந்து விளையாடிய டிவில்லியர்ஸ் கோலி பற்றி பேசும்போது “ஆர் சி பி அணி கோப்பையை வெல்வதுதான் கோலியின் அற்புதமான கேரியருக்கு நல்ல முடிவாக இருக்கும்.” எனப் பேசியுள்ளார். இந்த முறையாவது ஆர் சி பி அணிக் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த ரசிகர்களிடம் உள்ளது.