Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதனால்தான் விராட் கோலி அபூர்வம்.. பாராட்டித் தள்ளிய ரிக்கி பாண்டிங்!

Advertiesment
இதனால்தான் விராட் கோலி அபூர்வம்.. பாராட்டித் தள்ளிய ரிக்கி பாண்டிங்!

vinoth

, வியாழன், 6 மார்ச் 2025 (15:15 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக இருந்தது.

ஆனால் கடந்த ஞாயிறன்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து தான் இன்னமும் ‘ரன் மெஷின்தான்” என்பதை நிரூபித்தார். நேற்றைய அரையிறுதிப் போட்டியிலும் இக்கட்டான நிலையில் மிகச்சிறப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக இருந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 5 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். மற்ற அனைத்தும் ஒன்றும் இரண்டுமாக ஓடி சேர்த்ததுதான்.

இதைப் பற்றி பேசியுள்ள ரிக்கி பாண்டிங் “இப்போதுள்ள வீரர்களுக்கு 10 சிங்கிள்ஸ் எடுக்கக் கூட பொறுமை இல்லை. அதற்குள் பவுண்டரிகள் அடிக்க நினைத்து அவுட் ஆகிறார்கள். ஆனால் கோலி கடைசி வரை சிங்கிள்ஸ் எடுத்தே அணிக்கு நம்பிக்கையைத் தருகிறார். அதனால் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே க்ரவுண்டுல விளையாடினா மட்டும் பத்தாது.. திறமையும் இருக்கணும்! - இந்திய அணி குறித்து ஸ்டீவ் ஸ்மித்!