Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஸ்க்க நான் எடுக்குறேன்… நீங்க களத்துல இருந்தா போதும் – கோலியோடு சேர்ந்து ஸ்கெட்ச் போட்ட ராகுல்!

Advertiesment
இந்தியா

vinoth

, புதன், 5 மார்ச் 2025 (14:30 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகளாக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் பெற்று வந்த தொடர் தோல்விகளுக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நேற்றைய போட்டியில் இலக்கைத் துரத்திய போது மிகவும் பொறுப்புடன் ஆடி 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தார் ஆட்டநாயகன் கோலி. சதமடிக்கும் வாய்ப்பு இருந்தும் ஒரு தவறான ஷாட்டால் கோலி தன்னுடைய விக்கெட்டை இழந்தார். இந்த ஷாட்டைப் பார்த்து எதிர்முனையில் இருந்த கே எல் ராகுல், கோலியை கடிந்து கோபித்துக் கொண்டார்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய ராகுல் “நான் களத்துக்குள் வந்த போது எல்லா ரிஸ்க்கையும் நான் எடுக்கிறேன். நீங்கள் செட் பேட்ஸ்மேன். அதனால் கடைசி வரை நீங்கள் களத்தில் இருக்க வேண்டும் என கோலியிடம் சொன்னேன். அதை அவர் சிறப்பாக செய்தார்” எனக் கூறியுள்ளார். தனது அவுட்டுக்காக போட்டி முடிந்ததும் ராகுலிடம் சமாதானம் செய்யும் விதமாக பேசினார் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி கூட செய்ததில்லை… விமர்சனங்களுக்கு கம்பீரின் பதில்!