Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சில பின்பற்றவேண்டிய ஆன்மீக செயல்கள் என்ன தெரியுமா...?

சில பின்பற்றவேண்டிய ஆன்மீக செயல்கள் என்ன தெரியுமா...?
ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும்; சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும். பூஜை செய்த பொருட்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து இருக்க கூடாது.
சாமி படங்களில் இருக்க கூடிய காய்ந்த பூக்களை உடனே அகற்ற வேண்டும். விளக்கு எரிந்து கொண்டு இருக்கும் போது அதில் உள்ள எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடக் கூடாது. அது மட்டுமில்லாமல் கையில் இருக்கும் அந்த எண்ணெயை தலையில் எக்காரணம்  கொண்டும் தடவக் கூடாது.
 
விஷ்ணு கோவிலுக்கு சென்று வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் வீட்டுக்கு வருவாள் என்பது ஐதீகம். எனவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்னர் அங்கே அமரக் கூடாது.
 
அதிர்ஷ்டத்திற்கும் உதவும் சாமி படங்களான ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது  வாசலின் உள்ளேயோ அல்லது நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது நன்மையை தரும். வெளியே செல்லும்போது சட்டைப் பையில் எடுத்து  செல்வதன் மூலம் செல்லும் காரியம் வெற்றியோடு முடியும்.
 
வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம், வெற்றி, தனலாபம் போன்றவை  அதிகரிக்கும்.
 
திங்கட்கிழமைகளில் பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை எக்காரணம் கொண்டும் கையால் தொடக்கூடாது. அதே போல வீட்டில் கோலம்  போடாமலும் விளக்கேற்றாமலும் எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்லக்கூடாது.
 
அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய்துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெய்வங்களுக்கு இந்த பொருட்களில் அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்.....!!