Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா...?

எந்த கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா...?
நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. ஆனால் உண்மையில் இடல், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை.

நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும் எல்லா தெய்வங்களையும் வணங்கி விட்டு கடைசியாக நவக்கிரகங்களை சுற்றி வருவது தான்  சரியான முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது. 
 
சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும். சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும். செவ்வாயை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும். புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும். அறிவாற்றல் பெருகும்.
 
குரு பகவானை வணங்கினால் செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும். சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமைந்து வீடு, மனை வாங்கும் யோகமும்  உண்டாகும். சனி பகவான் வழிபாட்டால் ஆயுள் பலம் பெறும். ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.
 
கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும். மோட்சம் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும் போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-04-2020)!