Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று ' நிழலில்லா நாள்: பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு!

Advertiesment
தமிழகத்தில் இன்று  ' நிழலில்லா நாள்: பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு!
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (09:06 IST)
தமிழகத்தில் இன்று ' நிழலில்லா நாள்: பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு!
தமிழகத்தில் இன்று நிழல் இல்லாத நாள் நிகழ்வை அடுத்து கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தமிழகத்தில் ஆண்டுதோறும் இரண்டு முறை சூரியன் உச்சிக்கு வரும் நாட்களை நிழல் இல்லாத நாள் என்று கூறப்படுவதுண்டு. ஏற்கனவே இந்த ஆண்டு ஒரு நிழல் இல்லாத நாள் வந்த நிலையில் இன்று 2வது முறையாக மேல் நிழல் இல்லாத நாள் நிகழ்கிறது. இதனை அடுத்து சென்னை காஞ்சிபுரம் கடலூர் வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிழலில்லா நாளை காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் ' நிழலில்லா நாள் காட்சிப்படுத்தும் விளக்கம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சென்னை பிர்லா கோளரங்கத்தில் பார்வையாளர்கள் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியன் உச்சிக்கு வரும் நாள் என்பதால் இன்று நிழல் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழிசை செளந்தரராஜனின் தாயார் காலமானார்: தலைவர்கள் இரங்கல்!