Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியை அரிவாளால் வெட்டிய வாலிபர்: தூத்துகுடியில் பரபரப்பு..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (18:33 IST)
தூத்துக்குடியை சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் இன்று பொது தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் வாலிபர் ஒருவர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தூத்துக்குடி பகுதியில் உள்ள செக்காரக்குடி என்ற கிராமத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிட்டு மாணவி ஒருவர் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அவரை ஒருதலையாக காதலித்த சோலையப்பன் என்பவர் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் ஆனால் அந்த மாணவி அந்த வாலிபரை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவி மீது சரமாரியாக சோலையப்பன் வெட்டியதை அடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இந்த நிலையில் மாணவி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. மாணவியை வெட்டிய வாலிபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments