Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம்.. க்யூஆர் கோட் அறிமுகம் செய்த தஞ்சை மேயர்..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (18:27 IST)
மாநகராட்சி சம்பந்தப்பட்ட எந்த புகாரையும் வீட்டிலிருந்து கொடுக்கலாம் என்றும் அதற்கான க்யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தஞ்சாவூர் மேயர் தெரிவித்துள்ளார்.
 
தஞ்சாவூரில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் குடிநீர் பிரச்சனை குப்பை அல்லாமல் இருக்கும் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க இனி மாநகராட்சி அலுவலகம் வர தேவை இல்லை என்றும் க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த புதிய வசதியை தஞ்சை மேயர் ராமநாதன் இன்று அறிமுகப்படுத்தினார். தஞ்சாவூரில் உள்ள 51 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு மாதத்திற்குள் இந்த கியூ ஆர் ஸ்டிக்கர் ஒட்டி முடிக்கப்படும் என்றும் வீட்டில் வாசிப்பவர்களின் பெயர் முகவரி தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என்றும் அவர்கள் வீட்டில் இருந்தபடியே மொபைல் கேமராவில் க்யூகோடு ஸ்கேன் செய்து சொத்து வரி வீட்டு வரி உள்ளிட்ட வரிகளையும் செலுத்தலாம்  என்றும் புகார் செய்த சில மணி நேரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments