Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை கதிகலங்க வைத்த வாலிபர்

வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை கதிகலங்க வைத்த வாலிபர்
, செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (18:20 IST)
கடலூர் மாவட்டத்தில் வாகனச் சோதனையின் போது வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடலூர் என்.டி பகுதியில் போக்குவரத்து காவலர்கள் நேற்று நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இளையராஜா என்பவர் அதிகமாக மது அருந்திவிட்டு பைக் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருடைய பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
 
அந்த வாலிபர் தனது பைக்கை திருப்பி தருமாறு காவல்துறையினரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்துள்ளனர். மேலும், இப்போது பைக்கை தர முடியாது. காலையில் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு பைக்கை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
 
இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா, தனது பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடால் திடீரென்று கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அந்த வாலிபரை உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீர் பிரியர்களின் கவனத்திற்கு.. அக்டோபர் பெஸ்ட் பீர் திருவிழா...