சென்னை தியாகராய நகரில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறி இளைஞர் ஒருவர் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என்று சொன்ன நிலையில் அந்த பகுதி மக்கள் அந்த வாலிபரை தர்ம அடி கொடுத்து கம்பத்தில் கட்டி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தான் தங்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தியாகராய நகரை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் அந்த பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என்று கூறியள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அக்கம்பக்கம் இருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை சரமாரியாக அடித்து கம்பத்தில் கட்டி வைத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஷ் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.