Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

14 மாவட்டங்களை தொடர்ந்து 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

14 மாவட்டங்களை தொடர்ந்து 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
, திங்கள், 8 நவம்பர் 2021 (07:27 IST)

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் முன்னிட்டு கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது

இந்த நிலையில் சற்று முன் ஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மஞ்சள் அல்ர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!