Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
, திங்கள், 8 நவம்பர் 2021 (06:44 IST)
தமிழகத்தில் கன மழை பெய்து வருவதன் காரணமாக 14 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதையடுத்து இன்று முதல் மேலும் சில நாட்கள் மழை பெய்யும் என்றும் எனவே ஆரஞ்சு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் மீட்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை!