Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்..! வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை..!!

Senthil Velan
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (10:44 IST)
தமிழ்நாட்டிற்கு இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
 
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதன்படி, மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 108.32 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ALSO READ: 60 வயதில் மிஸ் யுனிவர்ஸ்..! அர்ஜென்டினா பெண் சாதனை..!!
 
ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments