Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? பொதுப்பணித்துறை அதிகாரிகள் முக்கிய தகவல்..!

Siva
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (10:41 IST)
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் போதுமான அளவு தண்ணீர் பாதுகாக்கப்பட்டு இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நீர் நிலைகளில் உள்ள தண்ணீர் ஆவி ஆகி வருவதாகவும் இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பஞ்சமில்லை என்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் தேவையான அளவிற்கு இருப்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் தற்போது எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் தற்போது 19 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் சென்னை வாழ் மக்களுக்கு குடிநீர் பஞ்சம் இப்போதைக்கு இருக்காது என்றும் கோடை காலம் என்பதால் நீர் வரத்து இல்லை நீர் வெளியேற்றம் இல்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ: போதை ஊசி செலுத்தி கொண்ட இளைஞர் பரிதாப பலி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரிவிதிப்பால் ஏற்பட்ட இழப்பு: 200 பில்லியன் செட்டில்மெண்ட் கேட்கும் நிறுவனங்கள்! - பதுங்கிய ட்ரம்ப்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நியாயம் கேட்ட முதியவருக்கு அடி, உதை! - அன்புமணி கண்டனம்!

ஒரு ரூபாய்க்கு ஒரு சிம்கார்டு.. பி.எஸ்.என்.எல். வழங்கிய அதிரடி அறிவிப்பு..!

அதிமுகவை விமர்சிக்க வேண்டாம்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த தீர்ப்பு: பள்ளிக்கல்வி துறை இன்று ஆலோசனை

அடுத்த கட்டுரையில்
Show comments