Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை யாஷிகா சென்ற கார் விபத்து: குடிபோதையில் சென்றாரா?

Webdunia
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (10:04 IST)
நடிகை யாஷிகா சென்ற கார் சென்னை நுங்கம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்த யாஷிகா, அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது அவர் ஐந்து படங்களில் நடித்து பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
 
இந்த நிலையில் நேற்றிரவு யாஷிகா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரில் இருந்தவர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த கார் நுங்கம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது ஒரு கடையில் மோதி நின்றுள்ளது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்து நடந்த சில நிமிடங்களில் யாஷிகா மட்டும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிகிறது
 
இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வரும் போலீசார் காரை ஓட்டியது யாஷிகாவா? என்பது குறித்தும் அவரும் மது அருந்தியிருந்தாரா? என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்