Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு.....

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (13:20 IST)
பிரபல தமிழ் எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பாலகுமாரன்(71) உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் மரணமடைந்தார்.

 
சிறுகதை, நாவல் எழுத்தாளர், சினிமா இயக்குனர், வசனகர்த்தா என பல முகங்களை கொண்டவர் பாலகுமாரன். இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் 150க்கும் மேற்பட்ட நாவல்கள், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
 
நாயகன் முதல் புதுப்பேட்டை வரை 23 திரைப்படங்களுக்கு இவர் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதிய இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருதும் வழங்கப்பட்டது. அதுபோக, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். பாட்சா படத்தில் ரஜினிகாந்த் பேசிய ‘ நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன  மாதிரி’ என்கிற வசனம் இவர் எழுதியதுதான்.
 
கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இரு முறை இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. எனவே, சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். இவரின் மறைவிற்கு பல எழுத்தாளர்களும், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments