Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

100 நாள் வேலை செய்த தொழிலாளர்களை காணவில்லை - கலெக்டரிடம் மனு !

100 நாள் வேலை செய்த தொழிலாளர்களை காணவில்லை -  கலெக்டரிடம் மனு !
, செவ்வாய், 28 ஜனவரி 2020 (21:13 IST)
திருப்பூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த ஊழியர்களைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் அடுத்துள்ள நஞ்சியம் பாளையம்  என்ற பகுதியில் 100 நாள்  வேலைவாய்ப்புத் திட்டத்தில், சுமார் 33 பேர் ராஜா என்பவரின் தோட்டத்தில் பணியாற்றியதாக  கணக்கு எழுதப்பட்டுள்ளது.
 
ஆனால், அங்கு வேலை செய்தவர்களில் 24 பேர் மட்டுமே வேலை செய்துள்ளனர். மீதமுள்ள 9 பேரை அங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் அவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு அந்த கிராம மக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிஎன்பிஎஸ்சி – தேர்வு பட்டியல் ரத்து !