Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிஎன்பிஎஸ்சி – தேர்வு பட்டியல் ரத்து !

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிஎன்பிஎஸ்சி – தேர்வு பட்டியல் ரத்து !
, செவ்வாய், 28 ஜனவரி 2020 (20:46 IST)
டிஎன்பிஎஸ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான வெளியான தேர்வு பட்டியலை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக அரசு வேலைகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் எனும் அமைப்பு (TNPSC) நடத்தி வருகிறது. ஆனால் இந்த அமைப்பு நடத்தும் தேர்வுகளில் சமீபகாலமாக பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன.

113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு அறிவிப்பு வெளியாகி தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் நேர்முகத் தேர்வுக்கு ஒரு பதவிக்கு 2 பேர் வீதம் அழைக்கப்படவேண்டும். ஆனால் வெறும் 33 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இது சம்மந்தமாக செந்தில் காந்த்  என்ற தேர்வர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை ஏற்று விசாரித்த நீதிபதி  33 பேரின் தேர்வு பட்டியலை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். எல்லா விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களையும் சரிபார்த்து அதை டி என் பி எஸ் சி க்கு அனுப்ப வேண்டும் என மோட்டார் வாகன பராமரிப்புத் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“கருத்துரிமை வரம்புக்கு உட்பட்டது”.. உயர்நீதிமன்றம் கருத்து