Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தையின்மை சிகிச்சைக்கு சென்ற பெண் – மருத்துவர் அத்துமீறல் !

குழந்தையின்மை சிகிச்சைக்கு சென்ற பெண் – மருத்துவர் அத்துமீறல் !
, வெள்ளி, 13 டிசம்பர் 2019 (08:21 IST)
குழந்தையின்மை சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சித்த மருத்துவர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் சித்த வைத்திய சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதனை அண்ணாதுரை என்பவர் நடத்தி வருகிறார். இவரிடம்  ராஜேஷ் என்பவர் மஞ்சள் காமாலைக்காக சிகிச்சை பூரண குணமாகியுள்ளார். அதனால் அவர் மேல் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக அங்கேயே குழந்தையின்மை பிரச்சனைக்காக மனைவியோடு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் அண்ணாமலை ராஜேஷுக்கு போன் செய்து புதிதாக மருந்து ஒன்று வந்திருப்பதாகவும் அதை உடனடியாக வந்து வாங்கிக் கொண்டு செல்லுமாறும் கூறியுள்ளார். ஆனால் அப்போது ராஜேஷ் அலுவலகத்தில் இருந்ததால் தனது மனைவியை அனுப்பியுள்ளார். ராஜேஷின் மனைவி அங்கு சென்றபோது மருத்துவமனையில் ராஜேஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

ராஜேஷின் மனைவியிடம் ‘உன் கணவனிடம் பிரச்சனை உள்ளது. அவரால் குழந்தைப் பெற முடியாது‘ என்று கூறி அந்த பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். இதனால் அதிர்ந்த அப்பெண் அங்கிருந்து தப்பித்து வெளியே வந்துள்ளார். இதையடுத்து தனது கணவருடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரளிக்க அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 பெண் குழந்தைகளை கொன்று, மனைவியுடன் தற்கொலை செய்த பரிதாபம்: வைரலாகும் வீடியோ