Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் காதலியை தனிமையில் அழைத்து கொலை செய்த காதலன் – நாமக்கல்லில் பரபரப்பு !

முன்னாள் காதலியை தனிமையில் அழைத்து கொலை செய்த காதலன் – நாமக்கல்லில் பரபரப்பு !
, வியாழன், 21 நவம்பர் 2019 (09:41 IST)
நாமக்கல்லில் முன்னாள் காதலியை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.

நாமக்கல் பேருந்துநிலையம் அருகே தள்ளுவண்டிக் கடை வைத்து நடத்தி வந்தவர் திருமங்கை. அவரது கடையில் தினசரி சாப்பிட வந்துகொண்டிருந்த தனபால் என்பவரைக் காதலித்து வந்துள்ளனர். ஆனால் சில மாதங்களுக்கு முன் கடையை மூடிவிட்டு திருமங்கை வேறு வேலைக்கு சென்றுள்ளார்.  அங்கு ரமேஷ் என்பவரை சந்தித்து அவரோடு காதல் ஏற்பட்டு திருமணமும் செய்துள்ளார்.

இதையறிந்த தனபால் அவர்மேல் ஆத்திரம் கொண்டு அவரைப் பழிவாங்க திட்டமிட்டுள்ளார். அதனால் அவரை ஒரே ஒரு முறை தனிமையில் சந்திக்கவேண்டும் என நைச்சியமாக பேசி வரவழைத்துள்ளார். இதையடுத்து இருவரும்மூலனூர் அமராவதி ஆற்றங்கரை அருகே சந்தித்துள்ளனர். அப்போது திருமங்கையை  கொலை செய்து அவரது சடலத்தை முட்புதரில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தனபால் தலைமறைவாகியுள்ளார்.

இதற்கிடையில் தனது மனைவியைக் காணவில்லை என ரமேஷ் அளித்த புகாரை அடுத்து தேடிய போலிஸார் ஆற்றங்கரை அருகே திருமங்கையின் உடலைக் கண்டெடுத்து பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலித் இளைஞரைக் காதலித்த மகள் – மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய தாய் !