Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியார் ஏரியாவுக்குள் கால் வைக்கும் சசிக்கலா! – அதிமுகவில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (10:44 IST)
சமீப காலமாக தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் சசிக்கலா அடுத்த வாரம் சேலம் சுற்றுபயணம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் சசிக்கலாவை இணைக்க வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் அதிமுகவிற்குள்ளேயே இருவேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளை சசிக்கலா சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதத்தில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இரண்டு கட்ட சுற்றுபயணம் மேற்கொண்ட சசிக்கலா அங்கு அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசி வந்தார். தற்போது மூன்றாவது கட்டமாக அடுத்த வாரம் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திற்கு சசிக்கலா சுற்றுபயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சுற்றுபயணம் குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “சசிக்கலாவின் சுற்றுப்பயணத்தால் எந்த மாற்றமும் நிகழாது. இது ஒரு ஜனநாயக நாடு என்பதால் சசிக்கலா சுதந்திர பறவையாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments