Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசுத் தலைவரை சந்திக்க இருக்கும் ஸ்டாலின்? அன்பில் மகேஷ் தகவல்

குடியரசுத் தலைவரை சந்திக்க இருக்கும் ஸ்டாலின்? அன்பில் மகேஷ் தகவல்
, திங்கள், 28 மார்ச் 2022 (13:02 IST)
நீட் விவகாரத்தில் விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். 

 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு தாக்கல் செய்த நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடி நீட் விலக்கு மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. 
 
இந்த மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். அப்போது ஆளுநரும் நீட் விலக்கு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 
 
இந்நிலையில் நீட் விவகாரத்தில் விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும், நீட் விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்கர்: வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்தது ஏன்?